பதிவு செய்த நாள்
20 ஆக2016
00:59
புதுடில்லி:டாடாவின் டிரென்ட், விரிவாக்க நடவடிக்கைக்காக, 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டிரென்ட் நிறுவனம், ஆடைகள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், மேற்கு ஆசிய நாடுகளில், புதிய ஆடை கடைகளை துவக்கவும்; இந்தியாவில் கூடுதலாக, 50 கடைகளை துவக்கவும் திட்டமிட்டு உள்ளது. இதற்காக அந்நிறுவனம், 150 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனத்திற்கு, இந்தியாவில் தற்போது, 58 நகரங்களில், 95 கடைகள் உள்ளன. வெளிநாடுகளில், ஆடைகளை விற்பனை செய்ய கடைகளை துவக்க திட்டமிட்டு உள்ளோம். எந்த நாட்டில் துவக்க வேண்டும் என்பது, ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த நாடுகளில், முதற்கட்டமாக, இரண்டு கடைகள் துவக்கப்படும்; வரவேற்பை பொறுத்து, கூடுதலாக கடைகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|