பதிவு செய்த நாள்
20 ஆக2016
01:02
விசாகப்பட்டினம்:ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைய உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த பூங்காவிற்கான அடிக்கல்லை நட்டு பேசியதாவது:இந்தியாவில், மருந்துகள் விலை குறைவாக உள்ளது. ஆனால், மருத்துவ உபகரணங்கள் விலை எக்கச்சக்கமாக உள்ளது. நாட்டிற்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்களில், 80 சதவீதம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதையொட்டி, மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த பூங்கா, 270 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இங்கு, 40 நிறுவனங்கள், தொழிற்சாலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளன. எனினும், 200 - 300 நிறுவனங்கள் இடம் பெறும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பூங்கா, 25 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|