பதிவு செய்த நாள்
20 ஆக2016
01:03
மும்பை:எஸ்.பி.ஐ., என, சுருக்கமாக அழைக்கப்படும், பாரத ஸ்டேட் வங்கியின் இயக்குனர் குழு, அதன் ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கியை இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அனுமதிக்குப் பின், அடுத்த ஓராண்டுக்குள், 6 வங்கிகளும், எஸ்.பி.ஐ., உடன் இணைக்கப்படும். எஸ்.பி.ஐ., உடன் இணையும், ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்பூர் வங்கியின், 10 பங்குகளுக்கு, எஸ்.பி.ஐ.,யின் 28 பங்குகள் வீதம் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும். எஸ்.பி.ஐ., உடன் இணையும், எஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகளின் தலா, 10 பங்குகளுக்கு, எஸ்.பி.ஐ.,யின் தலா, 22 பங்குகள் வீதம் வழங்கப்படும். பாரதிய மகிளா வங்கியின் 100 கோடி பங்குகளுக்கு, எஸ்.பி.ஐ.,யின், 4.42 கோடி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
எஸ்.பி.ஐ., உடன் இணையும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத, ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா ஆகியவற்றுக்கான பங்கு பரிவர்த்தனைகள் வெளியிடப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், எஸ்.பி.ஐ., அதன், ஸ்டேட் பேங்க் ஆப் சவுராஷ்டிரா, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் ஆகிய துணை வங்கிகளை இணைத்துக் கொண்டுள்ளது. தற்போதைய இணைப்பு நடவடிக்கைக்குப் பின், 37 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்துடன், உலகின் 50 பெரிய வங்கிகளுள் ஒன்றாக, எஸ்.பி.ஐ., உருவெடுக்கும். தனியார் துறையைச் சேர்ந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் வர்த்தகம், 7.20 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|