பதிவு செய்த நாள்
22 ஆக2016
03:50
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அடுத்த ஆண்டு செயல்பாடுகளை துவக்க உள்ளது. புதிய வகை வங்கிகளான பேமெண்ட் வங்கி துவக்க இந்திய அஞ்சல் துறை உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியது. இவற்றில் இந்திய அஞ்சல் துறை, புதிய வங்கியை அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், புதிய வங்கியை துவக்குவதற்கான பதிவு சான்றிதழ், ரெஜிஸ்ட்ரார் ஆப் கம்பெனியிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து, அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அடுத்த ஆண்டு செயல்பாடுகளை துவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கான ஊழியர்கள் பணி நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. நாடு முழுவதும் கிளைகள் அமைக்கப்பட உள்ளன. பணம் செலுத்தும் வசதிக்கான அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கிகள், டிபாசிட் பெறலாம். பண பரிவர்த்தனை மற்றும் பணம் செலுத்தும் சேவைகளை வழங்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|