பதிவு செய்த நாள்
22 ஆக2016
03:50
டிபாசிட் திரட்டும் அனுமதி பெற்ற நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ரிசர்வ் வங்கி, சாச்செட் எனும் புதிய விழிப்புணர்வு இணையதளத்தை துவக்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம் முதலீட்டாளர்கள் மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நிதி மோசடி தொடர்பான புகார் அளிக்கும் போது, தொடர்புடைய கட்டுப்பாட்டு அமைப்பு எது என்பதை அறிந்திருக்க வேண்டும். எனினும், இந்த தளம் மூலம் முதலீட்டாளர்களின் புகார் உரிய கட்டுப்பாட்டு அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்படும். புகாரின் நிலை குறித்தும் முதலீட்டாளர்கள் இந்த தளம் வாயிலாக தகவல் தெரிந்து கொள்ளலாம். ரிசர்வ் வங்கி, செபி உள்ளிட்ட கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் தகவல்கள் பரிமாற்றத்திற்கு வழி செய்யும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டுள்ள மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழுவான எஸ்.எல்.சி.சி., சார்பில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. http://www.sachet.rbi.org.in/home/index தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் இணையதளம் செயல்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|