பதிவு செய்த நாள்
22 ஆக2016
03:57
பானாஜி : கோவாவைச் சேர்ந்த, பவர்லேண்டு அக்ரோ டிராக்டர் வெகிக்கிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது புதிய மாடல் டிராக்டரை, வரும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
விவசாயத் துறை வேலைகளுக்காக, இந்த டிராக்டரில் பல புதுமைகளை செய்துள்ளதாக, இந்த நிறுவனம் தெரிவிக்கிறது.அக்டோபர் மாதத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு, 50 டிராக்டர்களை உற்பத்தி செய்ய இருப்பதாகவும், 2017ல் மஹாராஷ்டிரா, கர்நாடகா, கோவா மாநிலங்களில், 1,000 டிராக்டர்களை விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்நிறுவனத்தின் நிறுவனர் நாராயண் பி நாயக், ‘‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, 2 கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறோம். டிராக்டருக்கான உதிரி பாகங்கள் சீனாவிலிருந்து வாங்கப்படுகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில், இந்தியாவிலேயே முழுமையாக தயாரிக்கப்படும்,” என தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|