பதிவு செய்த நாள்
22 ஆக2016
03:57
கோல்கட்டா : கோத்ரெஜ் குழுமம், மேலும் பல நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்க உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் அதி கோத்ரெஜ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:நாங்கள் விவசாயம் மற்றும் நுகர்வோர் பிரிவில் இருக்கும் சில நிறுவனங்களை கையகப்படுத்தினோம். இதன் மூலம் நல்ல வளர்ச்சியை இன்னும் சில ஆண்டுகளில் எட்டுவோம். எங்கள் குழுமம், வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களை, குறிப்பாக ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள, வீட்டு தேவைகளுக்கான பொருட்கள் தயாரிப்பில் இருக்கும் நிறுவனங்களை கையகப்படுத்த விரும்புகிறோம். இதற்காக அதிக நிதி தேவைப்பட்டால், அதை திரட்டிக் கொள்வோம். பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் எங்கள் வளர்ச்சியை திட்டமிடுகிறோம். அதாவது, 10 ஆண்டுகளில், 10 சதவீத வளர்ச்சியை எட்டுவது என்பதுதான் எங்கள் திட்டம்.இவ்வாறு அதி கோத்ரெஜ் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|