பதிவு செய்த நாள்
22 ஆக2016
10:13
மும்பை : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிகாலம் செப்டம்பர் 4 ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஆகஸ்ட் 20 ம் தேதியன்று மாலை அறிவித்தது.
புதிய கவர்னர் நியமனம் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதன் எதிரொலியாக வாரத்தின் முதல் வர்த்தக நாளாக இன்று (ஆகஸ்ட் 22), இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 12.55 புள்ளிகள் சரிந்து 28,064.45 புள்ளிகளாகவும், நிப்டி 4.50 புள்ளிகள் சரிந்து 8662.40 புள்ளிகளாகவும் உள்ளன.
உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கவில்லை எனவும், இது தங்களுக்கு அதி்ர்ச்சி அளிப்பதாக உள்ளதாகவும் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியதை அடுத்து சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து காணப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|