பதிவு செய்த நாள்
24 ஆக2016
00:09
மும்பை : ‘வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், ‘ஆன்லைன்’ நிறுவனங்கள், விதிமுறைகளை மீறாமல் வியாபாரம் செய்ய வேண்டும்’ என, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
சமீபத்தில், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட வலைதள சந்தை நிறுவனங்கள், குறைந்த விலையில், ‘ஸ்மார்ட்போன், ‘டிவி’, ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை அதிரடியாக விற்பனை செய்தன. இதற்காக பத்திரிகைகள், வானொலி, ‘டிவி’ உள்ளிட்ட ஊடகங்களில் மிகப் பிரம்மாண்டமான விளம்பர பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற அதிரடி தள்ளுபடி விற்பனை மற்றும் விளம்பரங்கள், அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் என, கடைகளில் ஸ்மார்ட்போன், ‘டிவி’ உள்ளிட்ட பொருட்களை விற்கும் வர்த்தகர்கள் குமுறுகின்றனர்.
கடும் நடவடிக்கைஇதுகுறித்து, இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ‘கெய்ட்’, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையிடம் புகார் அளித்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: வலைதள சந்தை நிறுவனங்கள், வர்த்தகர்களுடன் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்ற அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறையை மீறி நுகர்வோருக்கு நேரடியாக பொருட்களை விற்கின்றன.கடந்த மார்ச்சில், ஆன்லைன் சில்லரை விற்பனையில், அரசு அனுமதி தேவையின்றி நேரடியாக, 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான விதிமுறைகளில், ‘மின்னணு வணிகத்தில் பொருட்களை இருப்பு வைத்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வலைதள சந்தை நிறுவனங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, சரக்குகள் மற்றும் சேவைகளின் விலையை நிர்ணயிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டு உள்ளது.
கடைகளில் விற்கப்படும் விலைக்கு நிகராகவே, ஆன்லைன் பொருட்களின் விலை இருக்க வேண்டும்; ஊடக விளம்பரங்களில் தள்ளுபடியை, சப்ளையர்கள் மற்றும், ‘பிராண்டு’கள் தான் வழங்குகின்றன என்பதை அறிவிக்க வேண்டும் எனவும் விதிமுறை கூறுகிறது.மேலும், ஒரு வலைதள சந்தை நிறுவனத்தின் மொத்த வர்த்தகத்தில், ஒரு சப்ளையர் உடனான வர்த்தகம், 25 சதவீதத்தை தாண்டக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இவற்றையெல்லாம் மீறி வலைதளத்தில் வர்த்தகம் புரிந்து வரும் ஆன்லைன் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
அறிவுரைஇந்த புகாரை தொடர்ந்து, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை செயலர் ரமேஷ் அபிஷேக் தலைமையில், நுகர்வோர் விவகார துறை செயலர், பல்வேறு அரசு துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டம், டில்லியில் நடைபெற்றது.‘இக்கூட்டத்தில் பங்கேற்ற ஆன்லைன் சில்லரை விற்பனை நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம், மின்னணு வர்த்தக விதிமுறைகளை பின்பற்றி வியாபாரம் செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டது’ என, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|