பதிவு செய்த நாள்
25 ஆக2016
00:22
பெங்களூரு : ஜே.எல்.எல்., இந்தியா நிறுவனத்தின் தலைவர் அனுஜ் பூரி கூறியதாவது:உலக வங்கி, சமீபத்தில், 160 நாடுகளின் சரக்கு போக்குவரத்து குறியீட்டை வெளியிட்டது. அதில், இந்தியா, 35வது இடத்திற்கு முன்னேறியுள்ளது; 2014ல், இந்தியா, 54வது இடத்தில் இருந்தது. இரண்டு ஆண்டுகளில், இந்தியா, 15 நாடுகளை விஞ்சி வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் துணை புரிந்துள்ளன. குறிப்பாக, சரக்கு போக்குவரத்தில், சுங்கத் துறை சார்ந்த நடைமுறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, இப்பிரிவில், 65வது இடத்தில் இருந்து, 38வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீதம், அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இது, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட முன்னேறிய நாடுகள் ஒதுக்குவதை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|