பதிவு செய்த நாள்
26 ஆக2016
00:08
மும்பை : வெல்ஸ்பன் இந்தியா நிறுவனம், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் உள்ளிட்ட ஜவுளி வகைகளை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை வருவாயில் மூன்றில் இரு பங்கு, அமெரிக்காவிற்கான ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது.
வர்த்தக உறவு முறிவுஇந்நிலையில், அமெரிக்காவின் டார்கெட் கார்ப்பரேஷன் நிறுவனம், 2014 ஆக., முதல் இந்தாண்டு ஜூலை வரையிலான காலத்தில், வெல்ஸ்பன் நிறுவனம் சப்ளை செய்த ஜவுளிகளை ஆய்வு செய்தது. அதில், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவை, எகிப்து நாட்டின் பருத்தியில் தயாரிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஒப்பந்தத்தை மீறி விட்டதாகக் கூறி, வெல்ஸ்பன் இந்தியா நிறுவனத்துடனான வர்த்தக உறவை முறித்துக் கொள்வதாக டார்கெட் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, வெல்ஸ்பன் நிறுவனத்திடம் இருந்து ஜவுளிகளை இறக்குமதி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட், ஜே.சி.பென்னி நிறுவனங்களும் ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளன.
ஆய்வுக்கு உத்தரவுஇவ்வகையில் நேற்று, நான்காவது நிறுவனமாக, அமெரிக்காவின் பெட் பாத் அண்டு பியாண்டுநிறுவனமும், வெல்ஸ்பன் ஜவுளிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், வெல்ஸ்பன் இந்தியா நிறுவனமும் அதன் சப்ளை குறித்த ஆய்வுக்கு உத்தரவிட்டு உள்ளது. இப்பிரச்னையால், வெல்ஸ்பன் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை, ஓராண்டில் இல்லாத அளவிற்கு சரிவடைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|