பதிவு செய்த நாள்
05 செப்2016
04:50
சென்னை:லெனோவோ நிறுவனம், புதுவையில் மட்டுமின்றி, தமிழகத்திலும் மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க முன்வந்துள்ளது.அண்மையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுவை சட்டமன்றத்தில் பேசும் போது, சீனாவைச் சேர்ந்த மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவோ, 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், புதுவையில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளதாகவும், இதற்கான பேச்சு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், லெனோவோ நிறுவனம், புதுவையில் மட்டுமின்றி, தமிழகத்திலும் தொழிற்சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது.சென்னையை அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டு வந்த மோட்டோரோலா நிறுவனத்தின் தொழிற்சாலையில், லெனோவோ தன் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.மோட்டோரோலா நிறுவனத்தை, அண்மையில், லெனோவோ கையகப்படுத்தியது. இதனால், மூடப்பட்டிருக்கும் மோட்டோரோலா தொழிற்சாலையிலேயே, லெனோவோ தன் தயாரிப்பை தொடரும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|