ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம்:‘4ஜி’ மொபைல் போன் சேவையில் இழப்பை தவிர்க்க 3 ஆண்­டு­க­ளாகும்ரிலையன்ஸ் ஜியோ நிறு­வனம்:‘4ஜி’ மொபைல் போன் சேவையில் இழப்பை தவிர்க்க 3 ... ... தமி­ழ­கத்­திலும் முத­லீடு செய்யலெனோவோ நிறு­வனம் விருப்பம் தமி­ழ­கத்­திலும் முத­லீடு செய்யலெனோவோ நிறு­வனம் விருப்பம் ...
கவ­னத்தை ஈர்க்கும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2016
23:56

அரசு அறி­வித்த தங்க திட்­டங்­களில், தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் படிப்­ப­டி­யாக நல்ல வர­வேற்பை பெற்று வரு­கி­றது. இது­வரை வெளி­யான நான்கு கட்ட பத்­தி­ரங்கள் மூலம் 2,240 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டுள்­ளது. தற்­போது ஐந்­தா­வது கட்­ட­மாக இவை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. கடந்த ஆண்டு, தங்க டிபாசிட் திட்டம், தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மற்றும் தங்க நாணய திட்டம் ஆகி­யவை அறி­முகம் செய்­யப்­பட்­டன. இவற்றில் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள், நகை உள்­ளிட்ட வடி­வத்தில் தங்­கத்தை வாங்­கு­வ­தற்கு பதி­லாக பத்­திர வடிவில் வாங்­கு­வதை ஊக்­கு­விக்கும் நோக்­கத்­துடன் அறி­முகம் செய்­யப்­பட்­டது. வெளி­யீடு
அரசு சார்பில், ரிசர்வ் வங்கி தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு வரு­கி­றது. இவற்றில் முத­லீடு செய்­ப­வர்கள் முதிர்வு காலத்தில் அப்­போ­தைய தங்க விலைக்கு ஏற்ப ரொக்­கத்தை பெற்­றுக்­கொள்­ளலாம். ஒரு கிராம் முதல் முத­லீடு செய்­யலாம். ஒருவர் அதி­க­பட்­ச­மாக 500 கிராம் வரை பத்­தி­ரங்­களை பெறலாம். முத­லீடு செய்­யப்­படும் காலத்­திற்கு 2.75 சத­வீத வட்­டியும் வழங்­கப்­ப­டு­கி­றது. இது அரை­யாண்டு அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். வங்­கிகள், அஞ்சல் அலு­வ­ல­கங்கள் மற்றும் பங்­குச்­சந்தை மூலம் இவற்றை பெறலாம். பத்­தி­ரங்கள் வெளி­யி­டப்­பட்ட பிறகு பங்­குச்­சந்­தை­யிலும் பரி­வர்த்­தனை செய்­யலாம். தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் ஒவ்­வொரு கட்­ட­மாக வெளி­யிடப்­பட்டு வரு­கின்­றன. இது­வரை நான்கு கட்­ட­மாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. தற்­போது ஐந்­தா­வது கட்­ட­மாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. செப்­டம்பர், 1ம் தேதி இதற்­கான விண்­ணப்­பங்கள் துவங்­கி­யுள்­ளது.
வரும் 9ம் தேதி வரை தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களை பெறு­வ­தற்­கான விண்­ணப்­பங்­களை சமர்­பிக்­கலாம். 23ம் தேதி இதற்­கான பத்­தி­ரங்கள் வழங்­கப்­படும். இதற்­கான விலை, கிராம் ஒன்­றுக்கு, 3,150 என நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. நான்காம் கட்­ட­மாக வெளி­யிட்­டப்­பட்ட பத்­தி­ரங்கள், கிராம் ஒன்­றுக்கு 3,119 என விலை நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது. தூய தங்­கத்தின் விலை அடிப்­ப­டையில் இதன் விலை நிர்­ண­யிக்­கப்­ப­டு­கி­றது.
வர­வேற்பு:இது­வரை வெளி­யி­டப்­பட்ட நான்கு கட்ட பத்­தி­ரங்கள் மூலம் 2,240 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டுள்­ளது. முதல் கட்ட பத்­தி­ரங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளி­யா­னது. அப்­போது 246 கோடி ருபாய் திரட்­டப்­பட்­டது. அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட நான்­கா­வது கட்­டத்தின் போது, அதி­க­பட்­ச­மாக, 919 கோடி ரூபாய் திரட்­டப்­பட்­டது. இது, 2.95 டன் தங்கத்திற்கு நிக­ரா­ன­தாகும்.சில்­லரை முத­லீட்­டார்கள் மத்­தியில் இவற்­றுக்­கான வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கி­றது. இரண்டாம் கட்ட வெளி­யீட்­டிற்கு பிறகு, அதிக ஆர்வம் ஏற்­பட்­டுள்­ள­தாக வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர். திட்டம் பற்­றிய விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­தி­ருப்­பது இதற்கு முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. மேலும், அரசும் இந்த திட்­டத்தை ஈர்க்கும் வகையில் பல்­வேறு மாற்­றங்­களை செய்து வரு­கி­றது. அதன்­படி குறைந்­த­பட்ச முத­லீடு ஒரு கிரா­மாக குறைக்­கப்­பட்­டு உள்ளது. கே.ஒய்.சி., நடை­மு­றை­களும் எளி­தாக்­கப்­பட்­டுள்­ளன.
தங்­கத்தின் விலை அதி­க­ரித்து வரு­வது மற்றும் வைப்பு நிதி திட்­டங்­க­ளுக்­கான வட்டி குறைந்­தி­ருப்­பதும் தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் மீதான ஆர்­வத்தை அதி­க­மாக்­கி­யுள்­ளது. கடந்த ஜன­வரி மாதம் முதல் தங்­கத்தின் விலை 25 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. தங்க சேமிப்பு பத்­தி­ரங்கள் திரு­மணம் போன்ற நிகழ்­வு­க­ளிலும் பரி­ச­ளிக்கும் வழக்கம் இருக்­கி­றது. பங்­குச்­சந்தை பரி­வர்த்­தனைபொது­வாக தங்­கத்தில் முத­லீடு செய்ய திட்­ட­மிட்­டுள்­ள­வர்­க­ளுக்கு இந்த பத்­தி­ரங்கள் ஏற்­ற­தாக கரு­தப்­ப­டு­கி­றது. நகை வடிவில் முத­லீடு செய்­வ­தை­விட பத்­திர வடிவ முதலீடு பாது­காப்­பா­ன­தாக கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், முதிர்வு காலம் வரை காத்­தி­ருக்க வேண்டும் என்­பதால் நீண்ட கால முத­லீ­டா­கவே இதை அணுக வேண்டும்.
எனினும், தங்க சேமிப்பு பத்­தி­ரங்­களை பங்­குச்­சந்­தையில் பரி­வர்த்­தனை செய்யும் வாய்ப்பும் உள்­ளது. எனவே, இடையில் வெளி­யேற விரும்­பினால் அதற்­கான வாய்ப்பு இருக்­கி­றது. எனினும், முதல் கட்ட பத்­தி­ரங்கள் பங்­குச்­சந்­தையில் பரி­வர்த்­தனை துவங்­கி­உள்ள நிலையில், பரி­வர்த்­தனை அளவு குறை­வா­கவே இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. பத்­தி­ரங்­களை வாங்­கி­ய­வர்கள் அதில் முத­லீட்டை தொடர விரும்­பு­வதன் அடை­யா­ள­மாக இது கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)