பதிவு செய்த நாள்
11 செப்2016
03:49
புதுடில்லி:மொபைல் போனில், உள்நாட்டு முகவரிகளை தேடித் தரும் சேவையை, ‘ஜஸ்ட் டயல்’ நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம், ‘பிரிபெய்டு வாலட்’ எனப்படும், மொபைல் போனில் பணப் பரிவர்த்தனை சேவையை துவக்க, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு, சமீபத்தில் ரிசர்வ் வங்கி, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக்கு ஜஸ்ட் டயல் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.
அதன் விபரம்:அதில், ஜஸ்ட் டயல் வாடிக்கையாளர்களுக்கு, பணப் பரிவர்த்தனை சேவையை வழங்க, நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக, ‘ஜே.டி.பிரிபெய்டு வாலட்’ என்ற சேவையை துவக்க அனுமதி கோரி, ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பிக்கப்பட்டது. அதற்கு, ரிசர்வ் வங்கி கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி கோரியுள்ள சில ஆவணங்களை, 2017 மார்ச்சுக்குள் அளித்து, பணப் பரிவர்த்தனை சேவையை துவக்க அனுமதி பெறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|