பதிவு செய்த நாள்
14 செப்2016
05:12
புதுடில்லி:இந்திய உப்பு தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பரத் ரவல் கூறியதாவது:டாடா கெமிக்கல்ஸ், கிராசிம், நிர்மா உள்ளிட்ட நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பயன்படும் உப்பு தயாரிப்பில், தரத்தை மேம்படுத்த, புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி வருகின்றன. இதன் மூலம், உற்பத்தி செலவும், உள்நாட்டிற்கும், வெளிநாட்டிற்கும் உள்ள விலை வித்தியாசமும் குறைந்துள்ளது. இத்துறையில் உள்ள நிறுவனங்கள் அனைத்தும், புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி, வளர்ச்சி காண, கூட்டமைப்பு உதவும்.‘காஸ்டிக் சோடா, சோடா ஆஷ்’ ஆகியவற்றின் தயாரிப்பில், உப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில், 37 சதவீதம், ரசாயன தொழிலுக்கு பயன்படுகிறது. சாதகமற்ற பருவ நிலை, கனமழை போன்றவற்றால், உப்பு உற்பத்தியும், தரமும் பாதிக்கப்படுகிறது. இதை சமாளிக்க, புதிய தொழில்நுட்பத்தில், தரமான உப்பு உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|