பதிவு செய்த நாள்
15 செப்2016
14:51
புதுடில்லி : உள்நாட்டில் கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்போர் அது குறித்த விபரங்களை மத்திய அரசிடம் தெரிவிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் கறுப்பு பண விபரங்களை அளிப்பவர்கள் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், வருமான வரித்துறை கமிஷனர், ஒழுங்குமுறை மையம், பெங்களூரு சிபிசி ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்படும் கறுப்பு பணம் பற்றிய விபரங்களோ அல்லது ஒப்படைக்கப்படும் தொகை விபரமோ நீதித்துறை அதிகாரிகளிடம் காட்டப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமான வரி படிவத்தில் 2 மற்றும் 4 பக்கங்களில் தேவையான கட்டங்கள் ஒதுக்கப்பட உள்ளது.
இதே போன்று ஆன்லைன் மூலம் அளிக்கப்படும் கறுப்பு பண விபரங்களும் நீதித்துறை சார்ந்த அல்லது நீதித்துறை சாராத அதிகாரிகளிடம் காட்டப்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இத்திட்டத்கதின் கீழ் விபரங்களை அளிப்பவர்களிடம் வங்கிகள் மூலம் எந்த விசாரணையும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ம் தேதிக்குள் வரி பாக்கி, அபராதம் செலுத்தினால் மொத்த வரியில் 45 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|