பதிவு செய்த நாள்
17 செப்2016
07:06
புதுடில்லி : மெர்சிடஸ் பென்ஸ், மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், உதிரிபாக கிடங்கு மற்றும் பயிற்சி மையத்தை அமைத்துள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மெர்சிடஸ் பென்ஸ், புனேவில், உதிரிபாகங்கள் கிடங்கு மற்றும் பயிற்சி மையத்தை அமைத்துள்ளது. மொத்தம், 16 ஆயிரத்து, 500 சதுர அடியில், கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மெர்சிடஸ் பென்ஸ் அகாடமி என்ற பெயரில், பயிற்சி மையமும் துவக்கப்பட்டுள்ளது. இதுவே, தெற்காசியாவில், அந்த நிறுவனத்தின் பெரிய மையமாகும். இங்கு, டீலர்களிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, மெர்சிடஸ் பென்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு, இந்தியா முக்கிய மையமாக திகழ்கிறது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு, தரமான சேவை வழங்க, கட்டமைப்பு பணிகளில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|