பதிவு செய்த நாள்
17 செப்2016
07:10
புதுடில்லி : ‘அடுத்த ஓராண்டு வரை, சர்க்கரை விலை சீராக இருக்கும்’ என, ‘இக்ரா’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: மத்திய அரசு, சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம், அதன் ஏற்றுமதிக்கு, 20 சதவீதம் வரி விதித்தது. மேலும், சர்க்கரை இருப்பு வைக்கவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருந்த போதிலும், உள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. மார்ச்சில், ஒரு டன் சர்க்கரை, 31,500 ரூபாயாக இருந்தது. இது, ஆகஸ்டில், 36 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு, உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளதும், சர்வதேச சந்தையில், சர்க்கரை பற்றாக்குறையால், அதன் விலை அதிகரித்துள்ளதும் காரணமாகும். எனினும், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால், சர்க்கரை விலை, அதிகம் உயராமல் தடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு, போதுமான அளவிற்கு பருவமழை பெய்யாததால், மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், நடப்பு பருவத்தில் சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.இந்தாண்டு பருவமழை பொழிவு காரணமாக, கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பயன், 2017 அக்டோபரில் துவங்கும், சர்க்கரை பருவத்தில் தான் தெரியும் என்பதால், அடுத்த, 9 – 12 மாதங்கள் வரை, சர்க்கரை விலை, அதிக ஏற்றத் தாழ்வின்றி, சீராக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|