பதிவு செய்த நாள்
19 செப்2016
05:21
புதுடில்லி : ‘உலகளவில், திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளதால், அத்தகையோரை தக்க வைத்துக் கொள்ள, பல்வேறு முயற்சிகளை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன’ என, பி.என்.பி., மெட்லைப் எம்பிளாயி பெனிபிட் டிரென்ட்ஸ் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: உலகளவில், திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இத்தகைய போக்கு கவலை அளிப்பதாக, ஆய்வில் பங்கேற்ற இந்திய நிறுவன பிரதிநிதிகளில், 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். திறமையாக பணி புரிவோரை, போட்டி நிறுவனங்கள் வளைத்துக் கொள்வதை தவிர்க்க, பல்வேறு சலுகைகள் வழங்குவதாக, 88 சதவீதத்தினர் கூறியுள்ளனர். ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள், பணியாளர்களுக்கு ஆயுள், ஆரோக்கியம், விபத்து காப்பீடுகளையும், நிதி சார்ந்த சலுகைகளையும் வழங்குகின்றன. ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளில், எப்போதும் இல்லாத வகையில், வேலையில்லா திண்டாட்டம் குறைந்து வருகிறது.இதன் காரணமாகவும், இந்நாடுகளில், தகுந்த பணியாளர் கள் கிடைக்காத கவலை அதிகமாக உள்ளது. இந்த கவலை, ரஷ்யாவில், 56 சதவீதம்; போலந்தில், 40 சதவீத நிறுவனங்களுக்கு உள்ளது.
ஊதிய உயர்வு, ‘போனஸ்’ போன்றவற்றின் மூலமாகவே நிறுவனங்கள், பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பது வழக்கம். ஆனால், தற்போது, ஊதியம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சலுகைகள் அடங்கிய, ‘பேக்கேஜ்’ முறை தான், திறமையான பணியாளர்களை, ஒரு நிறுவனம் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. அனைத்து விதத்திலும் தங்களை நல்ல முறையில் கவனிக்கும் நிறுவனங்களுக்கு, பணியாளர்கள் விசுவாசமுடன் வேலை செய்து, உற்பத்தியை அதிகரிக்க துணை புரிகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|