பதிவு செய்த நாள்
19 செப்2016
05:23
மும்பை : ‘சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும், இந்திய நிறுவனங்களின் பங்குகளில், வெளிநாட்டினர் மேற்கொண்டு வரும் முதலீடுஅதிகரித்து வருகிறது’ என, கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்யுட்டி ரீசர்ச் நிறுவனம்தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம், நடப்பு 2016 – 17ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், மும்பை பங்குச் சந்தையின், ‘பி.எஸ்.இ – 200 ’ குறியீட்டு நிறுவனங்கள் ஈர்த்த பங்கு முதலீடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், உள்நாட்டை விட, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்த ஆய்வறிக்கை விபரம்: அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், ‘பி.எஸ்.இ., – 200 ’ குறியீட்டு நிறுவனங்களில், ஏப்., – ஜூன் வரை மேற்கொண்ட முதலீடு, 7 சதவீதம் உயர்ந்து, 31,100 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, கடந்த, 2015 – 16ம் நிதியாண்டின், ஜன., – மார்ச் வரையிலான நான்காவது காலண்டில், 29,100 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்களின், சதவீத அடிப்படையிலான முதலீடு, 24.5 சதவீதத்தில் இருந்து, 24.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதே சமயம், இதே காலத்தில், உள்நாட்டு நிதி நிறுவனங்களின் முதலீடு, 11.1 சதவீதத்தில் இருந்து, 11.4 சதவீத அளவிற்கே உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கி, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. நுகர்வோர் மற்றும் தொழில் சார்ந்த துறைகளில், முதலீடு செய்வது குறைவாகவே உள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள், வாகனம், எரிசக்தி, வங்கி ஆகிய துறைகளில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றனர்.இதற்கு நேர்மாறான கொள்கையை, இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன. அவை, வாகனம், சிமென்ட் ஆகிய துறைகளில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து வருகின்றன; தொழில் மற்றும் வங்கித் துறைகளில் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, மருந்து துறையில், பங்கு முதலீடுகளை உயர்த்துவதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றன. தொழில்நுட்பம், நுகர்வோர், உலோகம் மற்றும், சுரங்கத் துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஆர்வம் குறைவாகவே உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த, பாரத் பைனான்சியல் இன்க்ளுஷன், எச்.டி.ஐ.எல்., கேஸ்ட்ரால் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளில், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை உயர்த்தி வருகின்றன. இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்கள், கேஸ்ட்ரால் இந்தியா, இப்கா லேபரேட்டரிஸ், யுனைடெட் புருவரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக் குவித்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
தொலைத்தொடர்பு துறையின் வரலாற்றை நீங்கள் பார்த்தீர்கள் என்றால், கடந்த 18–20 ஆண்டுகளில், எப்போதெல்லாம் கட்டணங்கள்குறித்த போர் கட்டவிழ்த்து விடப்பட்டதோ, அப்போதெல்லாம் அவை நுகர்வோர்களுக்கு பயனுள்ளதாகத்தான் இருந்திருக்கிறது. நுகர்வோர் தான் அரசன். இதை மக்களுக்காக செயல்படும் எந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ளும் என நான் நம்புகிறேன்.- மனோஜ் சின்ஹா, தொலைத்தொடர்பு துறை அமைச்சர், நியுயார்க்கில் உள்ள இந்திய துாதரக அலுவலகத்தில் பேசிய போது...
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|