ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்?ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்? ... உளுந்தம் பருப்பு வரத்து சரிவு:குவின்டாலுக்கு ரூ.500 உயர்வு உளுந்தம் பருப்பு வரத்து சரிவு:குவின்டாலுக்கு ரூ.500 உயர்வு ...
தமிழகம் - கர்நாடக போக்குவரத்து முடக்கம்:தினமும் ரூ.550 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2016
13:46

பெங்களூரு;“காவிரி பிரச்னையில் தமிழகம் - கர்நாடகா இடையிலான வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வர்த்தகம் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக வாகன போக்குவரத்துக்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும்,” என, கர்நாடக லாரி உரிமையாளர்கள், முகவர்கள் சங்கத் தலைவர் சண்முகப்பா வலியுறுத்தினார்.
பெங்களூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:காவிரி பிரச்னை காரணமாக, கடந்த சில வாரங்களாக, தமிழகம் - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே, சரக்கு எடுத்து செல்லும் வாகனங்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையேயான வியாபாரம், வர்த்தகம் பாதிக்கப்பட்டு, தினமும், 550 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது.
வாகன போக்குவரத்து இல்லாததால், விவசாயிகளின் விளைபொருட்கள், சந்தையிலேயே அழுகி பாழாகிறது. தமிழகத்தின் பல்வேறு நிறுவனங்களிலிருந்து வாகன உதிரி பாகங்கள், முட்டை மற்றும் காய்கறிகள் கர்நாடகாவுக்கு வருகின்றன.அதேபோன்று இங்கிருந்து தமிழகத்துக்கு வெங்காயம், சிறு சிறு உதிரி பாகங்கள் அனுப்பப்படுகின்றன. தற்போது தமிழக வாகனங்களை, கர்நாடக எல்லையிலும், கர்நாடக வாகனங்களை தமிழக எல்லையிலும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், இரு மாநிலங்களுக்கும் பேரிழப்பு ஏற்படுகிறது.
அத்துடன் மருந்துகள், உணவுப் பொருட்கள், தொழிற்சாலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அதிக விலை கொடுத்து, பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை மனதில் கொண்டு, இம்மாநிலங்களின் அரசுகளும், இவ்விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)