பதிவு செய்த நாள்
28 செப்2016
04:10
மும்பை : பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர், யு.கே.சின்கா கூறியதாவது: எப்.பி.ஐ., எனப்படும், அன்னிய நிதி முதலீட்டு நிறுவனங்கள், நேரடியாக, இந்திய கடன் பத்திரச் சந்தையில் வர்த்தகம் மேற்கொள்ள, கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம், ஒழுங்குபடுத்தப்பட்ட, பதிவு செய்த, எப்.பி.ஐ.,க்கள், இந்திய கடன் பத்திரச் சந்தையில், பங்குத் தரகர்கள் துணையின்றி, நேரடியாக வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது, கடன் பத்திரச் சந்தையில், அதிகளவில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க உதவும். அது போல, அடுத்து, பங்குச்சந்தையின் இதர பிரிவுகளிலும், எப்.பி.ஐ.,க்கள் நேரடியாக வர்த்தகம் மேற்கொள்ள அனுமதிக்கப்படலாம் என, ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அது போன்ற திட்டம் எதுவும் கிடையாது. அன்னிய முதலீட்டாளர்கள், நேரடியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் புரிவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|