பதிவு செய்த நாள்
30 செப்2016
00:51
புதுடில்லி;‘நடப்பு செப்டம்பருடன் முடியும், 2015 – 16ம் சர்க்கரை பருவத்தில், அதன் உற்பத்தி, கடந்த பருவத்தை விட, ஏழு சதவீதம் குறையும்’ என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான, ‘இஸ்மா’ தெரிவித்து உள்ளது.
பருவமழை:இதுகுறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஏழு ஆண்டுகளில், முதன்முறையாக, சர்க்கரை உற்பத்தி, அதன் நுகர்வை விட குறையும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. எனினும், போதுமான அளவிற்கு சர்க்கரை கையிருப்பு உள்ளதாலும், ஏற்றுமதி வரி உயர்வு, கையிருப்புக்கு கட்டுப்பாடு போன்ற மத்திய அரசின் நடவடிக்கையால், அதன் விலை கட்டுக்குள் இருக்கும். கடந்த ஆண்டு, போதுமான அளவிற்கு பருவமழை பெய்யாததால், மஹாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், நடப்பு பருவத்தில், சர்க்கரை உற்பத்தி குறைந்துள்ளது.
இந்தாண்டு பருவமழை பொழிவு காரணமாக, கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பயன், 2017 அக்டோபரில் துவங்கும் சர்க்கரை பருவத்தில் தான் தெரியும் என்பதால், அடுத்த ஓராண்டு வரை,சர்க்கரை விலை சீராக இருக்கும். கரும்பு கொள்முதல் விலை நிலையாக உள்ளதும், சர்க்கரை விலை உயர்வும், மஹாராஷ்டிரா, கர்நாடகா மாநில சர்க்கரை ஆலைகளுக்கு சாதகமான அம்சங்களாகும்.
கட்டுப்பாடுமத்திய அரசு, சர்க்கரை விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூன் மாதம், அதன் ஏற்றுமதிக்கு, 20 சதவீதம் வரி விதித்தது. வணிகர்கள் சர்க்கரையை இருப்பு வைப்பதற்கும், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மார்ச்சில், 31,500 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 1 டன் சர்க்கரை, தற்போது, 36 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|