வர்த்தகம் » பொது
6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெப்போ வட்டி வகிதம் 6.25 சதவீதமாக குறைந்தது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
04 அக்2016
15:43
மும்பை : ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன், தனது பதவிகாலத்தை முடித்ததையடுத்து புதிய கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கூட்டம் அவர் தலைமையில் நடந்தது. இது அவரின் முதல்கூட்டம், மேலும் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தது போலவே வளர்ச்சி கண்டு வருவது போன்ற காரணங்களால் வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்த்தது போலவே குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதம் குறையும் : ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு மற்றும் வாகனங்களுக்கான குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்....
* ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைப்பு
* ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைப்பு
* சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, 4 சதவீதமே தொடரும்.
* நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி 7.6 சதவீதம் இருக்கும்.
* 2017, மார்ச்க்குள் சில்லரை வர்த்தக பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும்.
* 2018-19-க்குள் நாட்டின் வளர்ச்சி 8 சதவீதத்தை எட்டும்
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 04,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 04,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 04,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 04,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!