பதிவு செய்த நாள்
16 அக்2016
05:32
புதுடில்லி:டில்லியில், சுற்றுச்சூழல் மாசு வழக்கில், 2,000 சி.சி., இன்ஜின் உள்ள டீசல் வாகனங்களுக்கு, கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால், ஜெர்மனியின் மெர்சிடஸ் பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ., உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இந்தாண்டு ஆகஸ்டில், டீசல் வாகனங்கள் மீதான தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட், கார் தயாரிப்பு நிறுவனங்கள், 1 சதவீதம் பசுமை வரி செலுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில், டில்லி வந்துள்ள ஜெர்மன் போக்குவரத்து துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோபிரின்ட், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் ஆனந்த் கீதேவை சந்தித்து பேசினார். அப்போது, ‘டீசல் கார் தயாரிப்பு, விற்பனை தொடர்பான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், ஜெர்மனி நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்டு முதலீடு செய்வது குறித்து முடிவெடுக்கும்’ என, தெரிவித்தார்.‘இப்பிரச்னை, ஏற்கனவே, மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது’ என, ஆனந்த் கீதே கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|