தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு ... டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிப்பு டீசல் விலை உயர்வால் லாரி வாடகை அதிகரிப்பு ...
70 லட்சம் வேலைகள் 'பணால்:'ஆய்வறிக்கையில் பகீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
14:25

புதுடில்லி:'இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2050ல், 70 லட்சம் வேலைகள் குறைந்து விடும் ஆபத்து உள்ளது' என, ஆய்வறிக்கையில், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளா தார பாதிப்புகளால், சில ஆண்டுகளாகவே, வர்த் தகம் மற்றும் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட் டுள்ளன.இதனால், வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த, 'பிரஹார்' என்ற ஆய்வு அமைப்பு, இந்தியாவில் வேலை வாய்ப்பு தொடர்பாக, ஆய்வு நடத்தியது; அதன் விபரம்:இந்தியாவில், 2011ல், ஒன்பது லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன; இது, 2013ல், 4.19 லட்சமாகவும், 2015ல், 1.35 லட்சமாகவும் குறைந்துள்ளன. பொருளாதார பாதிப்பு களே இதற்கு காரணம். நாள்தோறும், 550 வேலைவாய்ப்புகள் மறைந்து வரு கின்றன. இதேநிலை தொடர்ந்தால், 2050ல், இந்தியா வில், 70 லட்சம் வேலைகள் காணாமல் போய் விடும்; அதேநேரத்தில், மக்கள் தொகை, கூடுதலாக, 60 கோடி உயர்ந்து விடும்.உலக அளவில்,ஏற்பட்டுள்ள பொரு ளாதார பாதிப்புகளால், இந்தியாவில், எதிர்பார்த்த நேரடி அந்நிய முதலீடு குவியவில்லை. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், சில ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தான், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு இருக்கும்;அதிகபட்சமாக,60 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவதை தடுக்க, விவசாயம், சில்லரை வர்த்தகம், சிறு மற்றும் குறு தொழில்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 1சதவீதம்: இந்தியாவில், 50 சதவீதம் பேர், விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் சிறு மற்றும் குறு தொழில்கள், 40 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம், 1 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அமைப்பு சார்ந்த தொழில்களில், மூன்று கோடி வேலைவாய்ப்புகளே உள்ளன.விவசாயம் பாதிப்பு: 'இந்தியாவில் விவசாயம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளதே, வேலைவாய்ப்பு குறைவதற்கு முக்கிய காரணம்' என, உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. 1994ல், இந்தியாவில், 60 சதவீதம் பேர், விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்; 2013 நிலவரப்படி, இது, 50 சதவீதமாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)