பதிவு செய்த நாள்
18 அக்2016
23:31
லக்னோ : சாம்சங் நிறுவனம், உ.பி., மாநிலத்தில், 2,000 கோடி ரூபாய் முதலீட்டில், தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளது.
சாம்சங், நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி, விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், உ.பி., மாநிலத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அந்நிறுவனம், உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில், அம்மாநில அதிகாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், உ.பி.,யில் உள்ள நொய்டாவில், சாம்சங் புதிய தொழிற்சாலை அமைக்க உள்ளது.
இதுகுறித்து, முதல்வர் அகிலேஷ் கூறியதாவது:எங்கள் மாநிலம், தொழில் துவங்குவதற்கு, பல சலுகைகளை வழங்கி வருவதால், பலரும் முதலீடு செய்கின்றனர். மின் சாதனங்களுக்கு, கிராமம் மற்றும் நகர பகுதிகளில், தேவை அதிகரித்து வருகிறது. சாம்சங் அமைக்க உள்ள தொழிற்சாலையால், நொய்டாவை சுற்றியுள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|