பதிவு செய்த நாள்
18 அக்2016
23:32
சென்னை : ஓரியன்ட் எலக்ட்ரிக், தென் மாநிலங்களில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
ஓரியன்ட் எலக்ட்ரிக், மின் விசிறி உள்ளிட்ட மின் சாதன தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்கு, பரிதாபாத், கோல்கட்டாவில் தொழிற்சாலைகள் உள்ளன. மின் விசிறி விற்பனையில், ஓரியன்ட் நிறுவனம், 20 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. அடுத்தகட்டமாக தென் மாநிலங்களில், புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி சமீர் டாண்டன் கூறியதாவது: கடந்த ஆண்டில், 4.50 கோடி மின் விசிறி விற்பனையாகின. அதில், எங்கள் பங்களிப்பு, 90 லட்சம் மின் விசிறிகள் ஆகும். அடுத்து, தென் மாநிலங்களில், விற்பனையை அதிகரிக்க உள்ளோம். இதற்காக, புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு தயாரிக்கப்படும் மின் விசிறிகள் ஏற்றுமதியும் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|