பதிவு செய்த நாள்
26 அக்2016
07:32
புதுடில்லி : ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி நிறுவனம், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த, ஸ்வாசிலாந்தில், அனல்மின் நிலையம் அமைக்க, அந்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி, மின் நிலையம் அமைத்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஸ்வாசிலாந்து அரசுடன், மின் நிலையத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, ஜே.எஸ்.டபிள்யூ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், ஸ்வாசிலாந்து அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டின் மின் நிறுவனத்திற்கு, அனல்மின் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்கு தேவையான நிலக்கரியை சுரங்கத்தில் இருந்து எடுக்கவும், எங்கள் நிறுவனத்திற்கு, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக, 16 ஆயிரம் ஹெக்டர் சுரங்கம் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|