பதிவு செய்த நாள்
28 அக்2016
04:02
புதுடில்லி:இந்தியாவில், மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 100 கோடியை தாண்டும் என, ஜி.எஸ்.எம்.ஏ., அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த ஜூன் நிலவரப்படி, இந்திய மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 61.60 கோடி என்றளவில் உள்ளது. இது, 2020ல், 100 கோடியை தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதில், 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 67 கோடி என்றளவில் இருக்கும்.
கடந்த, 2015ல், ஜி.டி.பி., என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொபைல் போன் சார்ந்துள்ள தொழில்களின் பங்கு, ஒன்பது லட்சம் கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதுவும், 2020ல், 14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. மொபைல் போனில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 43 கோடியில் இருந்து, 67 கோடியாக அதிகரிக்கும் என, அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|