பதிவு செய்த நாள்
29 அக்2016
07:45
புதுடில்லி : ‘இந்தியாவில், வங்கிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள், ஐ.டி., எனப்படும், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு செலவிடுவது, வரும் ஆண்டில், 8.6 சதவீதம் உயர்ந்து, 780 கோடி டாலராக அதிகரிக்கும்’ என, கார்ட்னர் நிறுவனம் மதிப்பிட்டு உள்ளது.
வங்கிகள், அவற்றின் கிளைகளை, கணினி வாயிலாக ஒன்றிணைக்கவும், வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கவும், பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளுக்கும், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சேவைகளுக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. ஒருங்கிணைந்த தகவல் மையங்களை அமைப்பது; வங்கி நடவடிக்கைகளுக்காக புதிய சாப்ட்வேர்களை உருவாக்குவது; தொலை தொடர்பு சேவைகளை விரிவுபடுத்துவது போன்ற செயல்பாடுகளுக்கு, அதிகம் செலவிடப்படுகிறது. பாதுகாப்புத் துறை நிறுவனங்களும், சாப்ட்வேர், நவீன சாதனங்கள் போன்றவற்றுக்கு செலவு செய்வது அதிகரித்து உள்ளது என, கார்ட்னர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|