பதிவு செய்த நாள்
01 நவ2016
10:29
மும்பை : தீபாவளி பண்டிகையால் கடந்த மூன்று நாட்களாக விடுமுறை விடப்பட்டிருந்த இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாம்நாளான இன்று(நவ.,1-ம் தேதி) துவங்கிய போது உயர்வுடன் துவங்கின. ஆனால் சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தால் இன்றைய வர்த்தகம் ஏற்ற - இறக்கமாக காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.11 புள்ளிகள் உயர்ந்து 27,971.32-ஆகவும், நிப்டி 27.70 புள்ளிகள் உயர்ந்து 8,653.40-ஆகவும் இருந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்தன. இருப்பினும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததால் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 15 புள்ளிகள் சரிந்து 27,915.40-ஆகவும், நிப்டி 4.85 புள்ளிகள் உயர்ந்து 8,630.55-ஆகவும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|