பதிவு செய்த நாள்
03 நவ2016
05:16
புதுடில்லி : ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீட்டுவசதி கடன் பெற்றுள்ள, ஊதிய கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு, மேலும் கடன் பெறுவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, வீடு, வாகனம் உள்ளிட்டவற்றுக்கு கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில், இவ்வங்கி, ஏற்கனவே, வீட்டுவசதி கடன் வாங்கிய, ஊதிய கணக்கு உள்ள வாடிக்கையாளருக்கு, மறு கடன் வழங்கும் திட்டத்தை துவக்கி உள்ளது.
இது குறித்து, வங்கியின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:புதிய திட்டத்தின் படி, ஏற்கனவே, வங்கியிடம் வீட்டுவசதி கடன் வாங்கிய, ஊதிய கணக்கு உள்ளோர், குறைந்தபட்சம், 5 லட்சம் முதல், 1 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம். இதில், குறித்த காலத்தில் திரும்ப செலுத்தக் கூடிய பற்றுக் கடனை பெறும் வசதியும் உள்ளது. கல்வி, மருத்துவம், வீடு புதுப்பிப்பு, திருமணம் போன்றவற்றுக்கும் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|