பதிவு செய்த நாள்
10 நவ2016
10:04
மும்பை : அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் மற்றும் இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது உள்ளிட்ட காரணங்களால் நேற்று கடுமையான வீிழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று (நவம்பர் 10) ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. உலக பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி இருப்பதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 368.97 புள்ளிகள் உயர்ந்து 27,621.50 புள்ளிகளாகவும், நிப்டி 114.80 புள்ளிகள் உயர்ந்து 8559 புள்ளிகளாகவும் உள்ளன. ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளதால் உலக பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தை சந்தித்துள்ளன. அதே போன்று, நேற்றைய இடைவேளைக்கு பிறகு இந்தியாவில் வங்கிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. புதிய ரூ.500 மற்றும் 2000 நோட்டுக்கள் விநியோகம் துவங்கி உள்ளதால் பணத் தட்டுப்பாடு நீங்கி வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|