தங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.392 குறைவு ... விரைவில் புதிய ரூ.1000 நோட்டுக்கள் : நிதித்துறை செயலாளர் விரைவில் புதிய ரூ.1000 நோட்டுக்கள் : நிதித்துறை செயலாளர் ...
சுங்க கட்டணம் ரத்து: ரூ.150 கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 நவ
2016
11:51

நாட்டில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சிக்கலை தீர்க்க, நாளை வரை, சுங்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. இரண்டரை நாட்களில், சுங்க வசூலிப்பு நிறுவனங்களுக்கு, 150 கோடி ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படும்.

தமிழகத்தில், 5,006 கி.மீ., உட்பட, நாடு முழுவதும், 1.08 லட்சம் கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையமான, நகாய் மூலம் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்கள் மூலமும் பராமரிக்கப்படுகின்றன. பராமரிப்பு நிறுவனங்கள், சுங்க கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், 43 இடங்கள் உட்பட, நாடு முழுவதும், 391 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் மட்டும், ஐந்து கோடி ரூபாய் உட்பட, நாடு முழுவதும், தினமும், 60 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது.பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்துள்ளதால், சுங்கச்சாவடிகளில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை நள்ளிரவு வரை, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதற்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தடை விதித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதும், கட்டண வசூல் நிறுத்தப்பட்டது. இதன்படி, இரண்டரை நாட்களில், தமிழகத்தில், 12 கோடி ரூபாய் உட்பட, சுங்க வசூலிப்பு நிறுவனங்களுக்கு, 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)