பதிவு செய்த நாள்
11 நவ2016
06:02
புதுடில்லி : டாபே நிறுவனம், ராஜஸ்தான் மாநிலத்தில், 970 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, டாபே எனப்படும், டிராக்டர் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட் நிறுவனம், டிராக்டர்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், டாபே நிறுவனம், ராஜஸ்தானில், வேளாண் சார்ந்த திட்டங்களில், 970 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. ராஜஸ்தானில் நடந்த, சர்வதேச வேளாண் துறை முதலீட்டாளர்கள் மாநாட்டில், இது பற்றி அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனம், ராஜஸ்தானில், ஜே பார்ம் என்ற பெயரில், வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க உள்ளது. அங்கு, வேளாண் துறையில் நவீன மாற்றம், பயிர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|