பதிவு செய்த நாள்
11 நவ2016
06:03
புதுடில்லி : ஷீலா போம், ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் ஆகியவை, பங்குகள் வெளியிட்டு, நிதி திரட்ட, ‘செபி’ ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில், ஷீலா போம், படுக்கை விரிப்பு தயாரிப்பு உள்ளிட்ட வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 12 தொழிற்சாலைகள் உள்ளன. உலகில், 25 நாடுகளுக்கு, தன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர், உள்நாடு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில், மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஷீலா போம், ஆஸ்டர் ஆகியவை, விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதையடுத்து, பங்கு வெளியீட்டின் மூலம், நிதி திரட்ட பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் அனுமதி கேட்டது. அதற்கு, செபி, தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, அந்நிறுவனங்கள், விரைவில் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|