டாடா மோட்­டார்ஸில் மிஸ்­தி­ரிக்கு தலை­வலி; தனி இயக்­கு­னர்­க­ளிடம் ஒரு­மித்த ஆத­ர­வில்லை: அதி­கார போட்டிடாடா மோட்­டார்ஸில் மிஸ்­தி­ரிக்கு தலை­வலி; தனி இயக்­கு­னர்­க­ளிடம் ... ... உணவு பொருட்கள் விலை வீழ்ச்­சியால் மொத்த விலை பண­வீக்கம் சரிவு உணவு பொருட்கள் விலை வீழ்ச்­சியால் மொத்த விலை பண­வீக்கம் சரிவு ...
லாரி வாடகை 50 சத­வீதம் வீழ்ச்சி; கரன்சி நட­வ­டிக்­கையால் ஓட்­டு­னர்­க­ளிடம் பணப்­பு­ழக்கம் தாராளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2016
23:46

புது­டில்லி : மத்­திய அரசு, 500, 1,000 ரூபாய் செல்­லாது என, அறி­வித்­ததை அடுத்து, சரக்கு லாரி­களின் வாடகை, 50 சத­வீதம் குறைந்­து உள்­ளது.
கடந்த மாதம், தீபா­வளி பண்­டிகை, கரீப் பருவ அறு­வடை துவக்கம், மக்­க­ளிடம் பணப்­பு­ழக்கம் அதி­க­ரிப்பு போன்­ற­வற்றால், சரக்கு போக்­கு­வ­ரத்­துக்­கான லாரி வாடகை, 3 – 3.5 சத­வீதம் அதி­க­ரித்­தது. இந்­நி­லையில், நவ., 8ல், பிர­தமர் மோடி, 500, 1,000 ரூபாய் நோட்­டுகள் செல்­லாது என, அறி­வித்தார். இந்த திடீர் அறி­விப்பால், ஆங்­காங்கே சரக்கு போக்­கு­வ­ரத்தில் ஈடு­பட்­டி­ருந்த லாரி ஓட்­டு­னர்கள் பாதிக்­கப்­பட்­டனர்; கையில் பணம் இருந்தும், உணவு உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்கு அல்­லா­டினர்; சுங்­கச்­சா­வ­டி­களில் கட்­டணம் செலுத்­து­வதில், பல்­வேறு சிர­மங்­களை சந்­தித்­தனர்.
இதே நிலை தொடர்ந்தால், 70 சத­வீத சரக்கு லாரி போக்­கு­வ­ரத்து முடங்கும் என, தெரிய வந்­ததை அடுத்து, சுங்­கச்­சா­வடி கட்­டணம் ரத்து செய்­யப்­பட்டு, அதை தொடர்ந்து, 18ம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது. புதிய கரன்­சி­களை மாற்­று­வதில் உள்ள சிர­மங்­களால், மக்கள் அனா­வ­சிய செல­வு­களை குறைத்து, அவ­சி­ய­மா­ன­வற்­றுக்கு மட்டும் செல­வி­டு­கின்­றனர். இந்த அசா­தா­ரண சூழல் கார­ண­மாக, சரக்­கு­களை லாரி­களில் அனுப்­பு­வது குறைந்­துள்­ளது.
அதே சமயம், சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்கள், பெட்ரோல் நிலை­யங்­களில் மாற்­று­வ­தற்­காக, செல்­லாத ரூபாய் நோட்­டு­களை, லாரி ஓட்­டு­னர்­க­ளுக்கு தாரா­ள­மாக வழங்­கு­கின்­றன. வழக்­க­மாக, ஓட்­டு­னர்­க­ளுக்கு, 25 சத­வீ­தத்தை முன்­ப­ண­மாக தரும் சரக்கு போக்­கு­வ­ரத்து நிறு­வ­னங்கள், இப்­போது முழு தொகை­யையும் வழங்­கு­கின்­றன. அதே சமயம், மின்­னணு முறையில் பணப் பரி­வர்த்­த­னைகள் நடை­பெறும் சரக்கு போக்­கு­வ­ரத்தில், பாதிப்பு குறை­வாக உள்­ளது.
போனும் தப்பவில்லை!கரன்சி தட்­டுப்­பாட்டால் மொபைல் போன் விற்­பனை, 50 – 90 சத­வீதம் சரி­வ­டைந்து உள்­ளது. குறிப்­பாக, அதிக மதிப்­புள்ள ஆப்பிள் போன் விற்­பனை அடி­யோடு குறைந்­துள்­ளது. புதிய மொபைல் போன் அறி­முகம் தள்ளி வைக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)