பதிவு செய்த நாள்
17 நவ2016
05:36
ஆமதாபாத் : மாருதி சுசூகி நிறுவனம், குஜராத் மாநிலத்தில், தொழில் பயிற்சி நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது.
உள்நாட்டில், கார்கள் உற்பத்தி, விற்பனையில், மாருதி சுசூகி இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், குஜராத்தில் உள்ள மெக்சானா என்ற இடத்தில், தொழில் பயிற்சி நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது. இது, ‘ஜிம்’ அதாவது, ‘ஜப்பான் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மேனுபேக்சரிங்’ என்ற பெயரில் அழைக்கப்பட இருக்கிறது. மாருதி நிறுவனம், இந்த தொழில் பயிற்சி மையத்திற்கு, முதற்கட்டமாக, 3.20 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இந்த மையம், 2017 ஆக., மாதம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இங்கு ஆண்டுதோறும், 300 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புதிய தொழில் பயிற்சி மையம் மூலம், 10 ஆண்டுகளில், 30 ஆயிரம் பேருக்கு மேல், உற்பத்தித் துறை தொடர்பாக பயிற்சி வழங்கப்படும். அந்த மையத்தை, மாருதி சுசூகி நிர்வகிக்கும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|