கறுப்பு பண ஒழிப்பு நட­வ­டிக்கை; ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பாராட்டுகறுப்பு பண ஒழிப்பு நட­வ­டிக்கை; ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் பாராட்டு ... அக்­டோ­பரில் தங்கம் இறக்­கு­மதி 350 கோடி டால­ராக உயர்வு அக்­டோ­பரில் தங்கம் இறக்­கு­மதி 350 கோடி டால­ராக உயர்வு ...
ஆடம்­பர வீடுகளின் விலை சரிவு அடையும்; ரியல் எஸ்டேட் துறையின் கறைகள் போகும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2016
05:39

புது­டில்லி : மத்­திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுத்த நட­வ­டிக்­கையால், ஆடம்­பர வீடுகள் விலை சரி­வ­டையும்; ரியல் எஸ்டேட் துறையில், வெளிப்­ப­டைத்­தன்மை அதி­க­ரிக்கும்’ என, ஜே.எல்.எல்., இந்­தியா ரெசி­டன்­ஷியல் சர்­வீசஸ் நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி, அஷ்­விந்தர் ராஜ் சிங் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது:மத்­திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்­டு­களை செல்­லாது என அறி­வித்­தி­ருப்­பது, ரியல் எஸ்டேட் துறையை கடு­மை­யாக பாதிக்கும். இத்­து­றையில் தான், அதி­க­ளவில் கறுப்புப் பணமும், ரொக்க பரி­வர்த்­த­னை­களும் நடை­பெ­று­கின்­றன. குறிப்­பாக, மிக அதி­க­மாக கறுப்புப் பணம் புழங்கக் கூடிய, ஆடம்­ப­ர­மான, அதிக விலை­யுள்ள பழைய வீடுகள் விற்­பனை கடு­மை­யாக பாதிக்­கப்­படும். இவ்­வகை விற்­ப­னையில், வங்­கிகள், நிதி நிறு­வ­னங்கள் வழி­யி­லான பணப் பரி­வர்த்­த­னைகள் குறை­வா­கவும், ரொக்க பரி­மாற்றம் மிக அதி­க­மா­கவும் நடை­பெ­று­கி­றது.
அரசு நட­வ­டிக்­கையால், ஆடம்­பர வீடு­களை விற்­பனை செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளதால், அவற்றின் விலை, 25 – 30 சத­வீதம் குறையும். இது, ஆடம்­பர வீடு­களை வாங்­கு­வோ­ருக்கு சாத­க­மான அம்­ச­மாகும். ரியல் எஸ்டேட் சந்­தையில், திடீ­ரென கறுப்புப் பணப்­பு­ழக்கம் காணாமல் போனதால், கணக்கில் காட்­டாத பணத்தை, பல்­வேறு குடி­யி­ருப்பு திட்­டங்­களில் முத­லீடு செய்­துள்ளோர் கலக்­க­ம­டைந்து உள்­ளனர். அவர்கள், வந்­த­வரை லாபம் என்ற நோக்கில், குடி­யி­ருப்­பு­களை விற்­பனை செய்து, பணம் பெற முயற்­சிப்பர். இதனால், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்­பெ­ரிய விலை வீழ்ச்சி ஏற்­படும்.
அதே சமயம், நாட்டின் முக்­கிய எட்டு நக­ரங்­களில், புதிய குடி­யி­ருப்பு திட்­டங்­களில் ஈடு­பட்­டுள்ள, பாரம்­ப­ரி­ய­மான நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு மிகக் குறை­வா­கவே இருக்கும். இவற்றின் குடி­யி­ருப்­பு­களை வாங்­கு­வோரில், பெரும்­பா­லானோர், வங்கி அல்­லது நிதி நிறு­வ­னங்­களின் கடன் வச­தியில் வாங்­கு­வோ­ராக உள்­ளது தான் இதற்கு காரணம். மத்­திய அரசு, ரியல் எஸ்டேட் ஒழுங்­கு­முறை மேம்­பாட்டு சட்டம், பினாமி பரி­வர்த்­தனை சட்டம் ஆகி­ய­வற்­றுடன், கரன்சி செல்­லாது என, அறி­வித்­துள்ள திட்டம், ரியல் எஸ்டேட் துறையில் படிந்­துள்ள கறுப்புப் பணப்­பு­ழக்­க கறையை போக்கும். அத்­து­றையில், வெளிப்­ப­டை­யான செயல்­பா­டு­களை மேற்­கொண்டு, வளர்ச்சி காண வழி­வ­குக்கும்.இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)