பதிவு செய்த நாள்
17 நவ2016
05:40
புதுடில்லி : நாட்டின் தங்கம் இறக்குமதி, கடந்த அக்., மாதத்தில், 350 கோடி டாலராக அதிகரித்து உள்ளது.
சர்வதேச அளவில், தங்கத்தின் பயன்பாட்டில், சீனாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதனால், பல நாடுகளில் இருந்து இந்தியா, தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. கடந்த பிப்ரவரி முதல், செப்., வரை, நாட்டில் தங்கத்தின் இறக்குமதி குறைந்திருந்தது. தற்போது, தங்கத்திற்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால், நகைக் கடை உரிமையாளர்கள், அதிகளவில், தங்கத்தை இறக்குமதி செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த அக்டோபரில், தங்கம் இறக்குமதி, 350 கோடி டாலராக அதிகரித்து உள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே மாதத்தில், 167 கோடி டாலராக குறைந்திருந்தது.
இதே காலத்தில், வெள்ளி இறக்குமதி, 49 சதவீதம் சரிவடைந்து, 35.53 கோடி டாலரில் இருந்து, 18.19 கோடி டாலராக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூலை வரையிலான காலத்தில், 60 டன்னாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 250 டன்னாக அதிகரித்திருந்தது. கடந்த, 2015 – 16ம் நிதியாண்டில், இந்தியாவின் தங்க இறக்குமதி, 650 டன் என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|