நாசிக்கில் 2 நாளில் ரூ.786 கோடி அச்சடிப்புநாசிக்கில் 2 நாளில் ரூ.786 கோடி அச்சடிப்பு ... எல்.இ.டி., ‘டிவி’ தயா­ரிப்பில் வீடி­யோடெக்ஸ் – உஷா ஸ்ரீராம் எல்.இ.டி., ‘டிவி’ தயா­ரிப்பில் வீடி­யோடெக்ஸ் – உஷா ஸ்ரீராம் ...
பழைய நோட்டுகள் ரூ. 2,000 வரை மட்டுமே மாற்ற முடியும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2016
11:56

புதுடில்லி: வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500 லிருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை தவிர்க்கவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது:

*நாளை முதல் வங்கி கவுன்ட்டரில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500லிருந்து ரூ. 2ஆயிரமாக குறைப்பு.

*வங்கியில் பணம் மாற்றுவதற்கு நீண்ட வரிசையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*விவசாயிகள் ஒரு வாரத்தில் ரூ.25 ஆயிரம் வரை எடுக்கலாம்.

*பதிவு செய்த வர்த்தகர்கள் வாரம் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.

*திருமணம் நடத்தும் மணமகன் அல்லது மணமகளின் தந்தை அல்லது தாய், தங்களது வங்கிக்கணக்கில் ரூ.2.5 லட்சம் எடுக்கலாம்.

*திருமணத்திற்கு பணம் எடுக்க உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும்.

*விவசாயிகள் பயிர் காப்பீடு செலுத்த 15 நாள் கூடுதல் அவகாசம்.

*விளை பொருட்கள் விற்கும் போது காசோலை மூலம் பணம் பெறலாம்.

*வேளாண் சந்தை கமிட்டியில் பதிவு செய்தவர்கள் ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.

*பணம் எடுப்பதற்கான புதிய கட்டுப்பாடு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

*மக்களுக்கு தேவையான பணம் அச்சடிக்கும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது.

*ஏ.டி.எம்.,களை மாற்றியமைக்கும் பணி விரைவில் முடிவடையும்.

*மத்திய அரசின் குரூப் சி ஊழியர்கள் சம்பள முன்பணமாக ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் மாத சம்பளத்தில் இதை சரிசெய்யலாம்.

*ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்புவது தொடர்பாக சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

* அரசிடம் தேவையான பணம் உள்ளது. மக்கள் பீதியடைய தேவையில்லை எனக்கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)