பதிவு செய்த நாள்
23 நவ2016
05:45
புதுடில்லி : ‘இந்தாண்டு, மொபைல் போன் விற்பனை, 26.50 கோடியாக உயரும்’ என, ஆய்வு நிறுவனமான, சி.எம்.ஆர்., மதிப்பிட்டு உள்ளது.
அதன் விபரம்: இந்தாண்டு, மொபைல் போன் விற்பனையில், ஸ்மார்ட் போன்கள், 59 சதவீத பங்களிப்புடன், 11.60 கோடி என்ற விற்பனை இலக்கை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், இந்தாண்டு ஜன., – செப்., வரையிலான காலத்தில், 19.75 கோடி மொபைல் போன்கள் விற்பனையாகி உள்ளன. அதில், ஜூலை – செப்., வரையிலான, மூன்றாவது காலாண்டில் மட்டும், 7.84 கோடி மொபைல் போன்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
மதிப்பீட்டு காலத்தில், மொபைல் போன் விற்பனையில், தென்கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், 24.5 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது; அடுத்த இடங்களில், லாவா, 9.7 சதவீதம், இன்டெக்ஸ், 9.3 சதவீதம் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. ஸ்மார்ட் போன் விற்பனையில், லெனோவா, 10.4 சதவீத பங்களிப்புடன், இரண்டாவது இடத்தில் உள்ளது; மைக்ரோமேக்ஸ் நிறுவனம், 7.5 சதவீத பங்களிப்புடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இப்பிரிவில், லாவா மற்றும் இன்டெக்ஸ் நிறுவனங்களின் பங்களிப்பு, முறையே, 12.3 சதவீதம் மற்றும் 11 சதவீதம் என்றளவில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|