பதிவு செய்த நாள்
24 நவ2016
15:50
புதுடில்லி : ஒரே நேரத்தில் அதிக அளவிலான பணம் டெபாசிட் செய்வதற்கான வட்டி விகிதத்தை 1.9 சதவீதம் வரை குறைத்துள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். வங்கிகளில் இருந்து எடுக்கப்படும் பணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேசமயம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால், பழைய ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் மாற்ற முடியாதவர்கள், அதிக அளவிலான பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர்.
இதனால் ரூ.1 முதல் 10 கோடி வரையிலான டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தையும் எஸ்பிஐ குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் இன்று (நவம்பர் 24)முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மாற்றி அமைக்கப்பட்ட வட்டி விகிதத்தின்படி, டெபாசிட் செய்யப்பட்ட 180 முதல் 210 நாட்கள் வரையிலான பிக்ஸ்ட் டெபாசிட்களுக்கு 5.75 சதவீதம் வட்டிக்கு பதிலாக 1.90 முதல் 3.85 சதவீதம் மட்டும் வட்டி விதிக்கப்பட உள்ளது. ஓராண்டு முதல் 455 நாட்களுக்கு 4.25 சதவீதம் வழங்கப்பட உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|