பதிவு செய்த நாள்
30 நவ2016
01:53
புதுடில்லி;‘நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 2,084 கோடி ரூபாயாக குறைந்துள்ளது’ என, தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது. உலகில், தேயிலை உற்பத்தியில், சீனாவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில், இந்தியா உள்ளது. நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், 70 சதவீதம் உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது.
நடப்பு நிதியாண்டின், ஏப்., முதல் செப்., வரையிலான காலத்தில், இந்திய தேயிலை ஏற்றுமதி மதிப்பு, 2,084.06 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், 2,124.97 கோடி ரூபாயாக அதிகரித்து இருந்தது.
இதே காலத்தில், அளவின் அடிப்படையில், தேயிலை ஏற்றுமதி, 10.63 கோடி கிலோவில் இருந்து, 10.10 கோடி கிலோவாக குறைந்துள்ளது.இதில், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களின் தேயிலை ஏற்றுமதி, 5.83 கோடி கிலோவில் இருந்து, 5.81 கோடி கிலோவாக சற்று குறைந்துள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநில ஏற்றுமதி, 4.79 கோடி கிலோவில் இருந்து, 4.29 கோடி கிலோவாக சரிவடைந்துள்ளது.கடந்த நிதியாண்டில், தேயிலைஏற்றுமதி, அளவின் அடிப்படையில், 23.29 கோடி கிலோ; மதிப்பின் அடிப்படையில், 4,493 கோடி கிலோ என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|