குறைந்த விலை ‘ஸ்மார்ட் வாட்ச்’ டைட்டன் நிறு­வனம் தயா­ரிக்­கி­றதுகுறைந்த விலை ‘ஸ்மார்ட் வாட்ச்’ டைட்டன் நிறு­வனம் தயா­ரிக்­கி­றது ... ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.29 ரூபாய் மதிப்பில் உயர்வு : 68.29 ...
அமெ­ரிக்கா, பிரிட்டன் மட்டும் போதாது இந்­திய தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் சீனா, ஜப்பான் சந்­தை­களில் நுழைய வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
00:12

ஐத­ராபாத்: ‘‘இந்­தி­யாவைச் சேர்ந்த, தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள், அமெ­ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடு­களை மட்டும் நம்­பி­யி­ராமல், சீனா, ஜப்பான் போன்ற சந்­தை­க­ளிலும் நுழைய வேண்டும்,’’ என, இன்­போசிஸ் நிறு­வ­னருள் ஒரு­வ­ரான, கிரிஸ் கோபா­ல­கி­ருஷ்ணன் தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது:இந்­தி­யாவில், ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில்­நுட்பத் துறை, ஆண்­டுக்கு, 8 – 9 சத­வீதம் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இது, 2 – 3 சத­வீத சர்­வ­தேச பொரு­ளா­தார வளர்ச்­சி­யுடன் ஒப்­பிடும் போது, மிகவும் அதிகம். எனினும், சில ஆண்­டு­க­ளுக்கு முன், ஐ.டி., துறை கண்ட வளர்ச்சி, தற்­போது இல்லை; சற்று குறைந்­துள்­ளது.
இந்­நி­லை­யிலும், இந்­தி­யாவில் வேக­மான வளர்ச்சி கண்டு வரும் துறை­களில் ஒன்­றாக, ஐ.டி., துறை விளங்­கு­கி­றது. அதே சமயம், ‘சர்­வ­தேச அர­சியல் நில­வரம், ஸ்திர­மற்ற பொரு­ளா­தார சூழல், வங்­கிகள், நிதி நிறு­வ­னங்கள் ஆகி­யவை, ஐ.டி., செல­வி­னங்­களை குறைத்­துள்­ளது போன்­ற­வற்றால், நடப்பு நிதி­யாண்டில், நாட்டின் சாப்ட்வேர் ஏற்­று­மதி வளர்ச்சி, 8 – 10 சத­வீத அள­விற்கே இருக்கும்’ என, ‘நாஸ்காம்’ மதிப்­பிட்டு உள்­ளது.
இத்­த­கைய சூழலில், இந்­திய, ஐ.டி., துறை, அமெ­ரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடு­களை முற்­றிலும் சார்ந்­தி­ருக்­காமல், புதிய தொழில்­நுட்­பங்கள் மூலம், பிற நாடு­களில் வலு­வாக காலுான்ற முயற்­சிக்க வேண்டும்.
குறிப்­பாக, சீனா, ஜப்பான், ஆசிய பசிபிக் பிராந்­தியம் மற்றும் ஒரு­சில ஐரோப்­பிய நாடு­களில், வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­புகள் அதிகம் உள்­ளன. அதற்கு, இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்கள், புதிய தொழில்­நட்ப சேவை­களை வழங்க வேண்டும். உதா­ர­ண­மாக, செயற்கை நுண்­ண­றிவு சேவைகள், இணையம் சார்ந்த, ‘ரோபோ’ சாப்ட்வேர் உரு­வாக்கம், தகவல் அறி­வியல் சேவைகள் உள்­ளிட்ட, வேக­மாக வளர்ச்சி கண்டு வரும் தொழில்­நுட்­பங்கள் மூலம், வெளி­நாட்டு சந்­தை­களில், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்கள் வலு­வான அடித்­த­ளத்தை அமைத்துக் கொள்­ளலாம்.
சீனாவின், மிகப்­பெ­ரிய, ஐ.டி., சந்­தையில், இந்­திய நிறு­வ­னங்கள் நுழை­வது கடினம் என்ற போதிலும், ஒரு­சில சேவை­க­ளுக்கு அங்கு தேவைப்­பாடு உள்­ளது. அவற்றில், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்கள் கவனம் செலுத்­தலாம். அதற்கு, மிக அதிக முத­லீடு தேவைப்­படும். அது போல, ஜப்பான் சந்­தை­யிலும், இந்­திய, ஐ.டி., நிறு­வ­னங்­க­ளுக்கு வர்த்­தக வாய்ப்பு உள்­ளது; அவற்றை பயன்­ப­டுத்திக் கொள்­ளலாம். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)