பதிவு செய்த நாள்
09 டிச2016
10:27
மும்பை : ஆட்டோ துறை பங்குகள் உயர்வடைந்ததை அடுத்து, இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (டிசம்பர் 9) நிப்டி 8250 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கி உள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 105.86 புள்ளிகள் உயர்ந்து 26,800.14 புள்ளிகளாகவும், நிப்டி 24.85 புள்ளிகள் உயர்ந்து 8271.70 புள்ளிகளாகவும் உள்ளன.
அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், பார்தி ஏர்டெல், மாருதி சுசுகி, கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், விப்ரோ போன்ற நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்தியா ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்பட்ட போதிலும், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி இருப்பது முதலீட்டாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|