ஏற்றுமதி சூடு பிடித்துள்ளதால் தயாரிப்பு துறை வளர்ச்சி கூடும்ஏற்றுமதி சூடு பிடித்துள்ளதால் தயாரிப்பு துறை வளர்ச்சி கூடும் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.48 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.48 ...
பெருகும் நடுத்தர மக்களால் ஆடம்பர பொருட்கள் சந்தை 1,850 கோடி டாலராக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2016
01:33

புது­டில்லி:‘நடுத்­தர வரு­வா­யினர் பெருகி வரு­வ­தாலும், சர்­வ­தேச ‘பிராண்டு’ பொருட்கள் குறித்த விழிப்­பு­ணர்வும், பயன்­பாடும் அதி­க­ரித்­துள்­ள­தாலும், இந்­தி­யாவில் ஆடம்­பர பொருட்­க­ளுக்­கான சந்தை, 25 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,850 கோடி டால­ராக உயரும்’ என, சி.ஐ.ஐ., – கன்டர் ஐ.எம்.ஆர்.பி., ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்:இன்­றைய நடுத்­தர வர்க்க இளை­ஞர்கள், பகட்­டாக வாழ விரும்­பு­கின்­றனர். அவர்கள், ஆடம்­ப­ர­மான, ‘பிராண்டு’ உடை­களை அணி­வ­திலும், விலை அதிகம் உள்ள பொருட்­களை வாங்­கு­வ­திலும் ஆர்வம் காட்­டு­கின்­றனர். அவர்­க­ளுக்கு, சர்­வ­தேச பிராண்டு பொருட்கள் குறித்த அனைத்து தக­வல்­களும் இணை­யத்தில் கிடைக்­கின்­றன.
சிறிய நக­ரங்­க­ளிலும் இணைய பயன்­பாடு வேக­மாக பரவி வரு­வதால், உலகில் உள்ள மிகச் சிறந்த பிராண்டு பொருட்கள் குறித்த விழிப்­பு­ணர்வும் அதி­க­ரித்­துள்­ளது. அதனால், இந்­தி­யாவில் ஆடம்­பர பொருட்­களின் சந்தை, சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது.கடந்த, 2015ல் இந்­தி­யாவில் ஆடம்­பர பொருட்கள் சந்தை மதிப்பு, 1,470 கோடி டால­ராக இருந்­தது. இது, இந்­தாண்டு, 25 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 1,850 கோடி டால­ராக அதி­க­ரிக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இத்­து­றையின் வளர்ச்­சிக்கு, மின்­னணு சாத­னங்கள், ஆடம்­பர சுற்­றுலா திட்­டங்கள், தனி­நபர் பரா­ம­ரிப்பு பொருட்கள், ஆப­ர­ணங்கள், சொகுசு கார்கள், நட்­சத்­திர ஓட்டல் உண­வ­கங்கள் உள்­ளிட்­ட­வையும், குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வரு­கின்­றன.
வருங்­கா­லத்தில், வாசனை திர­வி­யங்கள், வாட்­சுகள், பிரத்­யேக வடி­வ­மைப்பு நகைகள், தோல் பரா­ம­ரிப்பு பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஆகி­ய­வையும் முக்­கிய பங்­காற்றும்.ஆடம்­பர பொருட்கள் மற்றும் சேவைகள் சந்­தையில், டில்லி, பஞ்சாப், ஹரி­யானா ஆகிய மாநி­லங்­களை உள்­ள­டக்­கிய வட மாநி­லங்கள், 40 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்­ளன.தமி­ழகம், கேரளா, ஆந்­திரா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­களை உள்­ள­டக்­கிய தென்­னிந்­தியா மற்றும் மேற்கு இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு, தலா 25 சத­வீ­த­மாக உள்­ளது; கிழக்கு பிராந்­தியம், 10 சத­வீத பங்­க­ளிப்பை வழங்­கு­கி­றது.
ஆடம்­பர பொருட்கள் சந்தை வளர்ச்­சிக்கு, வேக­மாக பரவி வரும் மின்­னணு வணி­கமும் துணை புரி­கி­றது. இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நக­ரங்­களில், ஆடம்­பர பொருட்­க­ளுக்­கான தேவை, மெல்ல அதி­க­ரித்து வரு­கி­றது.வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­ம­தி­யாகும், ஆடம்­பர பொருட்­க­ளுக்கு, 30 – 40 சத­வீத வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இதனால், வெளி­நா­டு­களை ஒப்­பிடும் போது, உள்­நாட்டில் ஆடம்­பர பொருட்­களின் விலை, சரா­ச­ரி­யாக, 20 சத­வீதம் அதி­க­மாக உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)