பதிவு செய்த நாள்
14 டிச2016
10:13
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் மூன்றாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின, ஆனால் சற்று நேரத்திலேயே பங்குச்சந்தைகள் சரிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 38.52 புள்ளிகள் உயர்ந்து 26,736.64-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 7.60 புள்ளிகள் உயர்ந்து 8,229.40-ஆகவும் இருந்தன. அமெரிக்க பெடரல் வங்கியிலிருந்து வெளியாக இருக்கும் வட்டி விகிதம் தொடர்பான முக்கிய முடிவுகள் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் இந்த ஏற்றம் சற்றுநேரம் தான் நீடித்தது. முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. காலை 10.00 மணியளவில் சென்செக்ஸ் 52 புள்ளிகளும், நிப்டி 24 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|