பதிவு செய்த நாள்
15 டிச2016
00:11
புதுடில்லி: கார்ப்பரேட் நிறுவனங்கள், நவம்பரில் மேற்கொண்ட, இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பு, 16 சதவீதம் சரிவடைந்து, 206 கோடி டாலராக குறைந்துள்ளது; கையெழுத்தான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, 43 ஆக உள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில், 246 கோடி டாலர் மதிப்பில், 46 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அப்போது, ஐந்து பெரிய நிறுவனங்கள், தலா, 10 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டன.
இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மொத்த மதிப்பில், தயாரிப்புத் துறை, 55 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இதில், டால்மியா பாரத் குழுமம், 110 கோடி டாலர் மதிப்பில், அதன் அனைத்து சிமென்ட் வர்த்தகத்தையும், ஒரே நிறுவனத்தின் கீழ் ஒருங்கிணைத்த நடவடிக்கையும் அடங்கும். இதன் மூலம், இந்நிறுவனம் சிமென்ட் உற்பத்தியில், நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், 28 சதவீத பங்களிப்புடன், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|